இந்தியா

மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, “பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் அதிகாரத்திலிருந்து அகற்றப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதாகவும், வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், பாஜக அரசியலமைப்பு விழுமியங்களை சிதைப்பதாக குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் 207 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், 80 இடங்களை மட்டுமே பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. கூட்டத்தில் பேசிய அபிஷேக் பானர்ஜி, “எங்கள் வீட்டை இடித்தாலும், நோட்டீஸ் அனுப்பினாலும் சரி, பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்” என்று உறுதியளித்தார். மேலும், தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி மீது அவர் கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்தார்.

மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் ‘புல்டோசர் கலாச்சாரத்திற்கு’ எதிராக, மே 21-ஆம் தேதி கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளில் போராட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்