இந்தியா

கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்.. 4 நாளில் பிடிபட்டார்…

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை, வெறும் நான்கு நாட்களில் காவல்துறையினர் அதிரடியாக துப்புதுலக்கியுள்ளனர்.

சொத்துத் தகராறு, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவையே இந்த துயரமான சம்பவத்திற்குக் காரணம் என்று மாவட்ட எஸ்பி சரத் சந்திர பவார் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட முகமது சுல்தான், அவரது மனைவி ஹசீனா, மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சிதைந்த உடல்கள் கடந்த ஜூன் 22 அன்று பூட்டப்பட்ட வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சையத் அஸ்லம் என்ற கார் ஓட்டுநர், கொலையை எப்படி செய்வது மற்றும் போலீஸாரிடம் சிக்காமல் எப்படித் தப்பிப்பது என்பது குறித்து இணையதளத்தில் யூடியூப் வீடியோக்களை பார்த்து திட்டமிட்டுள்ளார்.

ஹசீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி கேட்கும் போது ஏற்பட்ட தகராறும், ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களைத் திருடும் முயற்சியும் இக்கொலைக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த ஜூன் 19 அதிகாலையில் அஸ்லம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் உடலில் பலத்த கத்தி குத்து காயங்கள் இருப்பது உறுதியானது. கொலையை மறைக்க உடல்களை படுக்கை விரிப்பால் சுற்றி, வீட்டை வெளியில் பூட்டிவிட்டு தப்பியுள்ளனர். சிசிடிவி காட்சிகள், மொபைல் டிராக்கிங் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் மூலம் சையத் அஸ்லம், அவரது மனைவி தபஸும் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்