மறைந்த நடிகர் மற்றும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கே.பாக்யராஜ். பாக்கியராஜின் படங்களை பார்த்து பாராட்டியவர் எம்ஜிஆர். குறிப்பாக பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு,,தாவணி கனவுகள், சின்ன வீடு போன்ற படங்களை எம்ஜிஆர் மிகவும் விரும்பி பார்த்ததாக சொல்லப்பட்டது..
ஒரு கூட்டத்தில் பாக்யராஜ் என்னுடைய கலை வாரிசு எனவும் எம்ஜிஆர் அறிவித்தார். தற்போது பாக்கியராஜ் மறைந்துவிட்ட நிலையில் சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்.
நான் அதிமுகவில் இருந்த போது எம்.ஜி.ஆரை பாக்கியராஜ் என்னுடைய கலைவாரிசு என எம்.ஜி.ஆர் அறிவித்தார். அடுத்த நாள் ராமாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று ‘ஏன் இப்படி அறிவித்தார்கள்?’ என்று கேட்டேன். என்னை காரில் அமரவைத்து ராமபுரத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலை வாரிசு என அறிவித்த காரணங்களை சொல்லிக் கொண்டே வந்தார். அதன் பின்னர் அந்த முடிவு சரிதான் என்று நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

