மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார்.
காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதேபோன்று தற்போதைய தவெக அரசின் இரண்டு மாத கால ஆட்சியில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளதாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான நிர்வாக நடவடிக்கைகள் மூலம் அரசுத் துறைகளில் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு மாத கால செயல்பாடுகள் சான்றாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

