விடுமுறையில் இருந்தபோது தனது பணி மின்னஞ்சலின் தானியங்கி பதில் மூலம் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை அறிந்த 31 வயதுடைய இளைஞரின் செயல் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
விடுமுறையில் இருந்த அவருக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் குறித்த செய்தி வந்துள்ளது. பணியாளர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை தொடர்புகொள்ள விரும்புவோர் அவரது மேலாளரை அணுகுமாறும் அவரது பணி மின்னஞ்சலில் தானாகவே மாறியிருந்தது.
விடுமுறைக்கு செல்வதற்கு முன்னதாக, ஜனவரி மாதம் தான் பதவி உயர்வு பெற்றதாகவும், மேலாளருடன் சென்ற வாரம் மதிய உணவு அருந்தியபோது கூட எவ்வித மாற்றமும் தெரியவில்லை என்றும் அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். பணிநீக்கம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்காத நிலையில், அவர் ரெடிட் தளத்தில் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதை கண்ட இணையவாசிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மின்னஞ்சல் மற்றும் பிற தகவல்தொடர்புகளை ஆவணப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். விடுமுறை நாட்களை சிதைக்க வேண்டாம் என்றும், பணியில் மீண்டும் சேர்ந்த பிறகு இதை கையாளுமாறும் பலர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த தகவலை ஊழியர்களுக்கு தெரிவிக்கும் விதம் தொழில்முறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

