இந்தியாவில் ஏழைகள் ஒருபக்கம் இருந்தாலும் ஒருபக்கம் பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களான மகாராஷ்டிரா, புனே, குஜராத் போன்ற மாநிலங்களில் பல தொழிலதிபர்கள் இந்தியாவின் முக்கிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக அனில் அம்பானி, முகேஷ் அம்பானி போன்றவர்கள் இந்தியாவின் பணக்கார முகங்களாக திகழ்கிறார்கள். இந்நிலையில்தான் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக கணக்கு காட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 2025 – 26 நிதியாண்டில் 576 ஆக உயர்ந்திருக்கிறது.
2024 – 25 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 415ஆக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 142ஆக இருந்தது. தற்போது பணக்காரர்களின் எண்ணிக்கை கணிதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

