ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போரை தொடங்கியது. போரைத் துவங்கி 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் அது சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஹார்மூஸ் நீரிணை பக்கம் சென்ற சரக்கு கப்பல்களை ஈரான் தாக்க துவங்கியதால் அமெரிக்க மீண்டும் கோபமடைந்து ஈரானை மீண்டும் தாக்க துவங்கியது.
இந்நிலையில் ஈரானின் ராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டது.. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரங்களை முற்றிலும் முடக்கும் வகையில் Economic Day’ என்ற பெயரில் இதுவரை இல்லாத அளவில் புதிய, கடுமையான தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

