உலகம்

ஈரான்–அமெரிக்கா இடையில் மீண்டும் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்..

ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, அஸ்ராக் பகுதியில் உள்ள முவாஃபக் சல்தி விமானப்படை தளம் மற்றும் கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக IRGC தெரிவித்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு கட்டமைப்புகள், போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகவும், தாக்குதலில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும் ஈரான் தரப்பு கூறியுள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும் IRGC எச்சரித்துள்ளது. எதிர்காலத்திலும் பதிலடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்துக்குப் பிறகு ஈரான் பிரதேசத்தில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.

ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த