இலங்கை

நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோகணேசன்!

நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மேலும் சில கட்சிகளின் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, நாட்டடில் இனவாதத்தை ஒழிப்பதற்காக “இலங்கையர் தினத்தை” நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்