உலகம்

ஜப்பான் பிரதமர் இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்

ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையைத் தாக்கிய சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்தமைக்கு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதாபிமானக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இலங்கையுடனான நமது நட்புறவைக் கருத்தில் கொண்டும், ஜப்பான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க நிபுணர்கள் குழுவை அனுப்பவும், அவசரகால நிவாரணப் பொருட்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த