சினிமா

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மோகன்லால், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்கள் இணையலாம் என்ற தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன், தான் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கதாபாத்திரம் நிகழ்கால காட்சிகளிலா அல்லது பிளாஷ்பேக் பகுதியிலா என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விநாயகனின் இந்த புதிய உறுதிப்படுத்தல், ‘ஜெயிலர் 2’ மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்