இந்தியா

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய அவர், “வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திப்பது என்பது வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்தது. ஆனால், தற்போது நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவே பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்படி செயல்படுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வேறு கண்ணோட்டத்தை அளிப்பதை அரசு விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் இன்று டெல்லி வந்தடைந்தார். நாளை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் அணு உலைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்