இந்தியா

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

மேற்கு வங்க மாநிலத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல் கொல்கத்தாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

நதியா மாவட்டத்தின் தாஹேர்பூரில் நடைபெறவிருந்த மத்திய அரசின் வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் இன்று காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

தாஹேர்பூர் பகுதியில் நிலவிய மிக கடுமையான பனிமூட்டம் காரணமாக தெரிவுநிலை குறைவாக இருந்ததால், ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி விமானிகள் ஹெலிகாப்டரை மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேரில் வர முடியாத சூழலால், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்