வெனிசுலா நாட்டுடன் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் போர் நடப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
வெனிசுலா அரசு தொடர்ந்து எண்ணெய் கப்பல்களை இயக்கினால், அவற்றை அமெரிக்க துறைமுகங்களுக்கு திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ என்று அறிவித்துள்ள அமெரிக்கா, அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 கோடி டாலர் சன்மானம் அறிவித்துள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை பெருமளவில் குவித்துள்ளதால், எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் கப்பலை அமெரிக்க கடலோர காவல் படை கைப்பற்றியது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை உச்சக்கட்டத்திற்கு தள்ளியுள்ளது. மடூரோ உடனடியாக பதவியை விட்டு விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் டிரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

