இந்தியா

பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெயர் விடுபட்டவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், மீண்டும் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க தேவையான 12 முக்கிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2026 ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைபவர்கள் படிவம் 6-ஐயும், முகவரி மாறியவர்கள் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம்:

பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை , கடவுச்சீட்டு , ஓட்டுநர் உரிமம், வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புப் புத்தகம், ஜாதி சான்றிதழ், பள்ளி/பல்கலைக்கழகச் சான்றிதழ்கள், மத்திய/மாநில அரசு அடையாள அட்டை, பான் கார்டு, வன உரிமை சான்றிதழ் மற்றும் 1987-க்கு முன் அரசு வழங்கிய ஆவணங்கள்.

நேரடி முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் Voter Helpline App அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்