இந்தியா

பிரியங்காவை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்: டிகே சிவகுமார்

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்கா காந்தியின் பிரதமர் பதவி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக அமர வைப்பதே பிரியங்கா காந்தியின் ஒரே லட்சியம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் பிரியங்கா காந்தி பிரதமராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட பாஜக, ராகுல் காந்தியின் தலைமை மீது அக்கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை என்று விமர்சித்தது. இதற்கு பதிலளித்த சிவக்குமார், ராகுல் காந்தியே தங்களின் மிகச்சிறந்த தலைவர் என்றும், அவரை முன்னிறுத்தியே பிரியங்கா காந்தி பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும், கர்நாடக உள்கட்சி பதவி மாற்றங்கள் குறித்து பேசிய அவர், மேலிடத்தின் முடிவுகளுக்குத் தான் எப்போதும் கட்டுப்படுவதாக தெரிவித்தார். பிரியங்காவை விட ராகுலையே தாங்கள் பிரதமராக பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த சிவக்குமாரின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் தலைமை குறித்த விவாதங்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்