இந்தியா

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள்..!

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில், சுமார் 3 கோடி ரூபாய் காப்பீடு பணத்தை பெறுவதற்காக, அரசு ஊழியரான தந்தையை அவரது சொந்த மகன்களே பாம்பை கடிக்க வைத்து கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டையை சேர்ந்த கணேஷ் என்பவர், அரசு ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, அவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது கழுத்தில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

தொடக்கத்தில் இது ஒரு இயற்கை விபத்தாக கருதப்பட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் அளித்த தகவலால் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. கணேஷ் தனது பெயரில் மொத்தம் 11 காப்பீட்டு பாலிசிகளை எடுத்திருந்ததும், அவற்றின் மொத்த மதிப்பு 3 கோடி ரூபாய் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

காவல்துறையினர் கணேஷின் மகன்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் பாம்பு பிடிப்பவர்களுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. பணத்திற்காக ஒரு பாம்பை விலைக்கு வாங்கி வந்து, தந்தை தூங்கும்போது அதை கடிக்க வைத்து விபத்து போல நாடகமாடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். தந்தை என்றும் பாராமல் கொன்ற மகன்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்