ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் போர், விரைவில் ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று ஆற்றிய புத்தாண்டு உரையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேசிய பின்னரே, ஜெலென்ஸ்கி இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இல்லை” என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் “நாட்டின் நலனைப் பாதிக்கும் பலவீனமான ஒப்பந்தங்களில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டோம்” என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதலால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இந்த அமைதி முயற்சி உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

