இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப்போகிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. அதனை தொடர்ந்து அடுத்த நாளே சிவகார்த்திகேயன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது. ஒரே பண்டிகை காலத்தில் தனது இரண்டு பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாவது குறித்து நடிகை ஸ்ரீலீலா நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதை மீண்டும் ஒருமுறை திரையில் சொல்லப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, நான் மிகப்பெரிய ரசிகையாக மதிக்கும் விஜய் சார் மூலம் இந்த கதை மக்களிடம் செல்வது ஒரு அற்புதமான விஷயம்,” என்று கூறியுள்ளார்.
ஜனநாயகன் படத்தின் போட்டியான பராசக்தி படத்தின் நாயகியான ஸ்ரீலீலா தர்மசங்கடமின்றி தனது ரசிக மனோபாவத்தை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

