இந்தியா

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

விமானப் பயணத்தின்போது பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால், பவர் பேங்க் தற்போது ‘ஆபத்தான பொருள்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி விமானங்கள் பறந்துகொண்டிருக்கும்போது பவர் பேங்க் மூலம் மொபைல் அல்லது லேப்டாப் சார்ஜ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 100Wh திறனுக்கு குறைவான பவர் பேங்க்களை எடுத்து செல்ல பயணிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், இவற்றை சரிபார்க்கப்படும் லக்கேஜ்களில் வைக்கக்கூடாது; பயணிகள் தங்கள் கைப்பை அல்லது கேபின் பேக்கேஜில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

லித்தியம் பேட்டரிகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய விதியால், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்