உலகம்

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்

ஈரானில் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் அந்நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி அந்நாட்டு அரசு எதிராக போராட தொடங்கினர்கள். கடந்த மாதம் 28ம் தேதி துவங்கிய போராட்டம் தற்போது வரை நீடித்து வருகிறது.

ஒருபக்கம் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. நீங்கள் அரசுக்கு எதிராக போராடுங்கள்.. அரசு அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. உங்களை தாக்குபவர்களின் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்.. உங்களை நோக்கி உதவி வந்து கொண்டிருக்கிறது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இதன் காரணமாக அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளுமோ என்கிற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் ‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. மத்திய கிழக்கிற்கு மட்டுமல்ல.. உலகளாவிய பாதுகாப்பிற்கும் பேரழிவு ஏற்படும்’ என ரஷ்யா எச்சரித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த