தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவரது பூர்விகம் கர்நாடகாவோ இருந்தாலும் பிறந்து வந்ததெல்லாம் மும்பையில்தான். இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன்பின் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அதில், தெலுங்கு படங்கள் இவருக்கு கை கொடுத்தன. ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறி ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார்.
ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்தில் கூட மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடிருந்தார். அதோடு விஜயின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்
. இந்நிலையில்தான் ஒரு பேட்டியில் பகீர் தகவலை சொல்லியிருக்கிறார் பூஜா ஹெக்டே.
சில வருடங்களுக்கு முன் ஒரு ஃபேன் இண்டியா படத்தில் நடித்தேன். அப்போது ஒரு ஸ்டார் நான் கேரவனில் இருந்த போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து என்னை தொடவும் முயற்சி செய்தார்.. அவரின் கன்னத்தில் பளாரென அறைந்து விட்டேன். அதன்பின் அவர் என்னுடன் நடிக்கவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.

