இந்திய கார்ப்பரேட் உலகில் 40 வயது என்பது ஒரு காலத்தில் சாதனைகளின் உச்சமாக கருதப்பட்டது. ஆனால் இன்று, அது பலருக்கு ஒரு சவாலான எல்லைக்கோடாக மாறிவிட்டது.
அனுபவம் என்பது ஒரு சொத்தாக பார்க்கப்படுவதற்கு பதிலாக, ‘அதிக சம்பளம்’, ‘மாற்றங்களுக்கு பொருந்தாதவர்’ மற்றும் ‘முதிர்ச்சியானவர்’ என்ற முத்திரைகளுடன் ஒரு சுமையாக பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்தில், நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. இதனால், 15 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள், 40 வயதை கடந்தவுடன் வேலையிழப்பு அல்லது பதவி உயர்வு முடக்கம் போன்ற மறைமுக புறக்கணிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இளைஞர்களிடம் வேகம் இருக்கலாம், ஆனால் அனுபவமிக்கவர்களிடம் மட்டுமே முதிர்ச்சியான முடிவெடுக்கும் திறன் இருக்கும். ஒரு நிபுணர் 40 வயதில் அடையும் அனுபவம் என்பது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்குத் தேவையானது. ஆனால், தற்போதைய சூழலில் 40 வயதைக் கடந்தவர்கள் புதிய துறைகளை கற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும், கார்ப்பரேட் அவர்களை தவிர்க்கவே முயல்கிறது.

