உலகம்

இனிமேல் ஒயிட்காலர் ஜாப் உலகம் முழுவதும் கிடையாது.. எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்..!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில், மென்பொருள் துறை முதல் தளவாடங்கள் வரை அனைத்து துறைகளிலும் AI-ன் தாக்கம் தீவிரமாக இருக்கும். இது உற்பத்தி திறனை அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் பொருளாதார சமமின்மை போன்ற சவால்களை உருவாக்கும். “இதுவரை இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது, ஆனால் அது நீடிக்காது,” என்று கூறிய கேட்ஸ், வரி விதிப்பு முறைகளை மாற்றுவது மற்றும் தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளிப்பது குறித்து அரசாங்கங்கள் இப்போதே சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிவேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப புரட்சியில், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் AI-ஐ ஏற்றுக்கொள்வதில் காட்டும் வேகம் ஆகியவை உலகளாவிய ஒழுங்கில் முக்கிய பங்கு வகிக்கும். சுருக்கமாக சொன்னால், AI உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய சர்வதேச ஒத்துழைப்பும், முறையான கொள்கை முடிவுகளும் இப்போதே எடுக்கப்படாவிட்டால், சமூகம் பெரும் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த