அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ் அணியின் முக்கிய தூணாக விளங்கியவருமான கு.ப.கிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அதிமுகவின் நிறுவனத் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டு தான் மிகுந்த வேதனையடைந்ததாக அவர் தெரிவித்தார்.
தனது இணைப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மாபெரும் இயக்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்களை மேடையில் மதிக்காத இடத்தில் எதற்கு இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்ற அவர், “அரசியல் களத்தில் மாற்றத்தை கொண்டு வர ஒரு இளைஞர் இன்று புறப்பட்டிருக்கிறார். அவரின் முயற்சி வெல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் என்னையும் நான் இணைத்து கொண்டேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் தற்போது விஜய்யின் தலைமையிலான த.வெ.க-வை நோக்கி நகர்வது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

