இலங்கை

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று (03) தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்த போது வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், தற்போது குறைந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரதி அமைச்சர் 2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்