இலங்கை

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (19) பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

AI Impact 2026 மாநாட்டின் பின்னர ஜனாதிபதி அனுரகுமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić) மற்றும் ஸ்லோவாக்கிய குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி (Peter Pellegrini) ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவர்கள் தவிர அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva), பூட்டான் பிரதமர் Tshering Tobgay ஆகியோரையும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அதேநேரம், நேற்றைய உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்