ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த சில நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபக்கம் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈராக் தாக்குதல் நடத்தி வருகிறது.. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகள் வழியாகவே வருகிறது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஈரான் கடல் பகுதியில் உள்ள ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் செல்கிறது.. ஆனால் ஹோர்மூஸ் நீரிணியை ஈரான் அரசு மூடிவிட்டதால் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.. மேலும் எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில்தான், எரிபொருள் விலை உயர்வு காரணமாக இண்டிகா விமான நிறுவனம் தனது கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. இந்தியா மற்றும் இந்திய துணை கண்ட பகுதிகளுக்கு ரூ.425 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்ருக்கிறது. அதேபோல் மேற்காசிய நாடுகளுக்கு ரூ.900, தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவுக்கு ரூ.1800, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.2300 வரை விமான கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேநேரம் இது ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணியவர்களுக்கு பொருந்தாது. அதாவது, புதிதாக விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

