நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கி விட்டார். கருப்பு திரைப்படத்திற்கு பின் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் & சன்ஸ் என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஜித்து மாதவன் பகத் பாசிலை வைத்து ஆவேசம் படத்தை இயக்கியவர்.. இந்நிலையில் இந்த படத்தில் இறுதிக்காட்சியில் சிம்புவின் நடித்தால் நன்றாக இருக்கும் என ஜித்து மாதவன் கருதி இருக்கிறார். எனவே, சிம்புவை அணுகி இதுபற்றி பேசியிருக்கிறார். அப்போது, கதை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துதான் எழுதினேன் என ஜித்து மாதவன் சொல்ல சிம்பு உற்சாகமாகிவிட்டாராம்.
அப்போது சிம்பு ‘உங்கள் ஆவேசம் படத்திற்கு நான் ரசிகன்.. உங்கள் படத்தில் நடிப்பது எனக்கு சந்தோசம்.. நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நான் நடித்து கொடுக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார். இந்த படம் இரண்டு பாகமாக உருவாகவுள்ளது. இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு இணையாக சிம்புவின் கதாபாத்திரம் இருக்கும்’ என சொல்லப்படுகிறது.

