இந்தியா

திடீரென செயலிழந்த இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்.. 8,700 ரயில்கள் நிலை என்ன?

இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான நேவிக் செயற்கைக்கோள் கட்டமைப்பு தற்போது பெரும் சவாலை சந்தித்துள்ளது. சில நாட்களுக்கு முன் IRNSS-1F செயற்கைக்கோளின் அணுக்கடிகாரம் செயலிழந்ததால், வழிகாட்டுதல் சேவைகளை வழங்க தேவையான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. நேவிக் சரியாக செயல்பட குறைந்தது ஏழு செயற்கைக்கோள்கள் தேவைப்படும் நிலையில், இந்த சரிவு அதன் சேவைகளைப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, ஜனவரி 2025-ல் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது. அணுக்கடிகாரங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்த நேவிக் திட்டத்தில், முதல்முறையாக உள்நாட்டு அணுக்கடிகாரத்துடன் என்.வி.எஸ்-01 ஏவப்பட்டது ஒரு மைல்கல்லாகும்.

தற்போது 8,700 ரயில்கள் மற்றும் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகள் இதை பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்தகட்ட செயற்கைக்கோள்களான என்.வி.எஸ்-03 மற்றும் என்.வி.எஸ்-04 ஏவப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

L1 அலைக்கற்றை ஆதரவுடன் வரவிருக்கும் புதிய செயற்கைக்கோள்கள் மட்டுமே நேவிக் அமைப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்