இலங்கை

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவித்துள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையேற்றத்தைத் தொடர்ந்து, சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை பாரியளவில் அதிகரித்துள்ளது:

அதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றருக்கு 122 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 487 ரூபா ஆகும்.

சுப்பர் டீசல்: ஒரு லீற்றருக்கு 219 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 572 ரூபா ஆகும்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலைகளை மாற்றியமைத்துள்ளது:

அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீற்றருக்கு 81 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 398 ரூபா.

ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றருக்கு 90 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 455 ரூபா.

ஒட்டோ டீசல்: ஒரு லீற்றருக்கு 79 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 382 ரூபா.

சுப்பர் டீசல்: ஒரு லீற்றருக்கு 90 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 443 ரூபா.

நேற்று (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சாதாரண மண்ணெண்ணெய் விலையும் ஒரு லீற்றருக்கு 60 ரூபா அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 255 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தளம்பல்கள் காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என எரிசக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்