பாலிவுட் திரையுலகில் தற்செயலான நிகழ்வுகளை விட, கர்மவினை மற்றும் நீதியே கதைகளை அழகாக்குகின்றன.
2007-ல் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில், வில்லன் அர்ஜுன் ராம்பால் நடிகை தீபிகா படுகோனை தீயால் சூழப்பட்ட செட்டிற்குள் வைத்து கொடூரமாக கொன்றிருப்பார். அந்த படத்தில் ஷாருக்கான் பழிவாங்கினாலும், 19 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ வாழ்க்கையில் தீபிகாவின் கணவரான ரன்வீர் சிங், திரையில் அந்த பழியை தீர்த்துள்ளதாக இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘துரந்தர் 2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், உளவாளியாக வரும் ரன்வீர் சிங், வில்லன் அர்ஜுன் ராம்பாலை ஒரு எரிபொருள் டாங்கருக்குள் வைத்து தீயிட்டு கொளுத்துகிறார்.
நெருப்பு மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மரணம் என இரண்டு காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமையை சமூக வலைதளங்கள் வைரலாக்கி வருகின்றன. “தன்னுடைய மனைவியை கொன்ற அர்ஜுன் ராம்பாலை 19 ஆண்டுகளுக்கு பிறகு ரன்வீர் பழிவாங்கிவிட்டார்” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம், பழைய சினிமா நினைவுகளை தூண்டி ரசிகர்களுக்கு ஒரு நீதியை வழங்கியுள்ளது.

