இந்திய எண்ணெய் கப்பலான ஹரி ஆனந்த் நேற்று (29) பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கைக் கொண்டு வந்ததாக துறைமுகங்கள் அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கப்பல் வந்தடைந்த உடனேயே, கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு சரக்கை மாற்றும் பணி தொடங்கியது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்தது.

