விளையாட்டு

ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, 2026 ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடர் நீண்ட காலம் நடப்பதாலும், தனது சுழற்பந்து வீச்சு திறமைக்கு அங்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை விட, அதிரடி பேட்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜாம்பா, பிஎஸ்எல் தொடரில் விளையாடும் முடிவு மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜாம்பா, போதிய வாய்ப்புகள் கிடைக்காததும் தனது முடிவுக்கு ஒரு காரணம் என விளக்கியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்