இந்தியா

குரங்குகளை விரட்ட 100 பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை.. உச்ச நீதிமன்றம் டெண்டர்

உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் டெண்டர் கோரியுள்ளது.

சுமார் 35 முதல் 40 நீதிபதிகளின் பங்களாக்கள், நீதிமன்ற விருந்தினர் மாளிகை மற்றும் முக்கிய நீதிமன்ற வளாகங்களில் குரங்குகளை விரட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சுமார் 100 பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைக்கேற்ப இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியின் போது குரங்குகளுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்றும், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960-ன் படி விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். டெல்லி போன்ற பசுமை நிறைந்த உயர் பாதுகாப்பு மண்டலங்களில் வனவிலங்கு ஊடுருவல் ஒரு முக்கிய சவாலாக மாறிவருவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

குரங்கு தொல்லையை மனிதாபிமான முறையிலும், தொழில்முறை ரீதியாகவும் கையாள இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்