இந்தியா

ஒரு முழு ரயில் பெட்டியையும் ரிசர்வ் செய்த திருமண வீட்டார்.. ஆடல், பாடல் என கொண்டாட்டம்..

இந்திய திருமணங்கள் என்றாலே ஆடல், பாடல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்த கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

ஒரு குடும்பம் ஒட்டுமொத்த ரயில் பெட்டியையும் முன்பதிவு செய்து, ரயிலையே ஒரு ‘நடமாடும் திருமண மண்டபமாக’ மாற்றியுள்ளனர். இதுகுறித்த வீடியோவில், ரயில் பெட்டியின் பெயர் பலகையில் மாலை அணிவிப்பது முதல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக நடனமாடுவது வரை அனைத்தும் பதிவாகியுள்ளது.

மணப்பெண் கேக் வெட்டி கொண்டாட, உறவினர்கள் திருமண சடங்கிற்கான சீர் வரிசைகளுடன் உற்சாகமாக சூழ்ந்துள்ளனர். ஒரு டிக்கெட் பரிசோதகர் அந்த நெரிசலில் தனது பணியை செய்ய முயல்வதும், பின் சிரிப்புடன் அவர்களுடன் இணைவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் இருதரப்பு விவாதங்களை உருவாக்கியுள்ளது. “கூட்டு குடும்பமாக பயணிப்பது ஒரு தனி சுகம்” என்று சிலர் பாராட்டினாலும், “பொது இடங்களில் இவ்வளவு சத்தம் தேவையா?” என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில், இந்திய ரயில்வேயின் FTR அதாவது Full Tariff Rate முறைப்படி, ஒரு முழு பெட்டியையோ அல்லது ரயிலையோ தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு முன்பதிவு செய்வது சட்டப்பூர்வமான சேவையாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்