உலகம்

காசா அழிஞ்சிட்டிருக்கு!.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. இந்தியாவுக்கு பாலஸ்தீனம் கோரிக்கை..

2023ம் வருடம் பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியானார்கள். மேலும் 250 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போரை துவங்கியது.

கடந்த மூன்று வருடங்களாக காசா மற்றும் பாலஸ்தீன நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 73 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஒருபக்கம் 1,73,200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

போர் காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது., மக்கள் அன்றாட உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்கிறது. இந்நிலையில்தான் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என பாலஸ்தீனம் கோரிக்கையை வைத்திருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமான கோரிக்கையில் ‘இந்தியாவும் இந்திய மக்களாலும் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?.. காசாவின் மேற்கு கரையில் முற்றிலும் சீர்குலையும் நிலையில் உள்ள சுகாதாரத் துறையை காப்பாற்ற இந்தியாவில் ஆரோக்யா மைத்ரி திட்டத்தின் கீழ் அவசரமாக 100 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க வேண்டும்’ என பாலஸ்தீனம் கோரிக்கை வைத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த