விளையாட்டு

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி…

இலங்கை ஏ அணியுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று தம்புள்ளையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்தியா ஏ அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 10 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 94 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்தியா ஏ அணியின் ரன் வேகம் குறையவில்லை.

தற்போது களத்தில் கேப்டன் திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி வருகின்றனர். 14.4 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் அபாரமான ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இலங்கை ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கப் போராடி வருகின்றனர். கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களத்தில் மிரட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்