தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் கூட்டணிக் மாற்றங்கள் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து, தற்பொழுது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும் முறைப்படி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே ஜி.கே.வாசன் விலகிய நிலையில், தற்பொழுது ஜான் பாண்டியனும் வெளியேறியிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், இவர்கள் இருவரும் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் இணையப் போகிறார்களா என்ற புதிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள தவெக, ஒரு பலமான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தவெகவின் அட்மினிஸ்ட்ரேஷன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், தங்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாசனை தொடர்ந்து ஜான் பாண்டியனும் தவெகவை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

