தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் போதைப் பொருள்கள் முழுமையாகவே அளிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும் காவல்துறையில் போதை தடுப்புச் சட்டம் என தனி பிரிவு உருவாக்கி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அதனை அடுத்து தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்று வந்தது. அதில், பலரும் கைது செய்யப்பட்டார்கள்.
பல இடங்களில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக இன்று அதிகாலை முதல் கருமத்தம்பட்டி பேரூர் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், வட மாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் 400க்கும் மேற்பட்ட போலீசார் கோவை முழுவதும் சோதனை செய்தனர். அதில், கிலோ கணக்கில் குட்கா, மெத்தபட்டமைன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

