தென்னிந்தியாவின் இசைக்குயில், பல தலைமுறைகளின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் (1938–2026) காலமானார். 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனது இனிமையான குரலால் 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
செந்தூரப் பூவே, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட நான்கு பாடல்களுக்காகத் தேசிய விருதுகளை வென்றதோடு, மொத்தம் 33 வெவ்வேறு மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் போன்ற கலைஞர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளன. இவரது உடல் வைக்கப்படவுள்ள மைதானத்தில் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலங்கள் கடந்தாலும், இவர் பாடிய பாடல்கள் மூலம் நம்மிடையே என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். இவரது மறைவு இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

