அமெரிக்காவின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பணவியல் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவும் தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட மூன்று இந்திய வம்சாவளி நிபுணர்களை உள்ளடக்கிய ஐந்து விசேஷ பணிக்குழுக்களை ஃபெடரல் ரிசர்வ்ப் புதிய தலைவர் கெவின் வார்ஷ் அறிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன், ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் கரேன் டைனன் மற்றும் முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் ஜெரமி ஸ்டெய்ன் ஆகியோருடன் இணைந்து ‘பேலன்ஸ் ஷீட் பாலிசி’ பணிக்குழுவில் பணியாற்ற உள்ளார். இக்குழு, அமெரிக்க மத்திய வங்கியின் தற்போதைய சொத்து இருப்புகள், அதன் செலவுகள் மற்றும் பணவியல் கொள்கைகளில் அவற்றின் தாக்கம் குறித்து விரிவான மறுஆய்வு செய்யும்.
இவர்களுடன் டெல்லியில் பிறந்த அமெரிக்க பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி ‘பொருளாதார தரவுக் குழுவிலும்’ , மைக்ரோசாப்ட் எக்ஸிகியூட்டிவ் ஆஷா சர்மா ‘உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புக் குழுவிலும்’ நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணிக்குழுக்களில் நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜென்ட், வால்மார்ட் முன்னாள் சிஇஓ டக் மெக்மில்லன் போன்ற உலகின் சிறந்த அறிஞர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

