இந்தியா

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கி நடப்போம் என்ற பேரணியின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டனர். போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தடுத்தனர். இந்த சம்பவத்தால் மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், ஜன்பத் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு பிறகு, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதம், உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அரசின் அலட்சியத்தை கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தை தொடருமாறு கட்சி தலைமை தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, சட்டத்தை மதிக்குமாறு டெல்லி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தம் கோரி இளைஞர்கள் நடத்தும் இந்த தொடர் போராட்டம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்