இப்போதெல்லாம் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது. அதற்கு காரணம் ஒவ்வொரு ஊரிலும் அரசே நடத்தும் டாஸ்மாக் இருக்கிறது. எனவே இளைஞர்கள் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். மது உடல் நலத்திற்கு கேடு.. குடி குடியை கெடுக்கும் என மதுபான பாட்டிலில் எழுதப்பட்டிருந்தாலும் அதை மதுப்பிரியர்கள் கண்டு கொள்வது கிடையாது.
ஒருபக்கம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தரமான மதுபான வகைகள் கிடைப்பதில்லை என மதுப்பிரியர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். தற்போது தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் டாஸ்மாக் தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இன்று கூட டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் Old Monk, Roayl Challenger, Bagpiper, Antizuity Blue ஆகிய மதுபானங்களை சில வகைகளை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் (FSSAI) தடை செய்துள்ளது. இந்த மதுபானங்களில் செயற்கையான நிறமி மற்றும் சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

