விளையாட்டு

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சியின் வயது குறித்த விவாதங்கள் உலகளவில் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ இதுகுறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்சிக்கு 15 வயதா அல்லது அதற்கு மேற்பட்ட வயதா என்பது முக்கியமல்ல; அவர் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் விளையாடுகிறாரா என்பதுதான் கவனிக்கப்பட வேண்டும் என்று லீ கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் வேகத்தை எதிர்கொண்டு அவர் அடித்த 97 ரன்கள் வியக்கத்தக்கது என்றும், துல்லியமான கிரிக்கெட் ஷாட்களையும் அபாரமான சக்தியையும் அவர் கொண்டுள்ளார் என்றும் லீ பாராட்டியுள்ளார்.

மேலும், வைபவ் சூர்யவன்சி மீது அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்காமல் அவரை குழந்தையாகவே இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தான் ஒருவேளை வைபவ்க்கு எதிராக பந்துவீசியிருந்தால், அவரது பேட்டிங் திறமையை சோதிக்க ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியிருப்பேன் என்றும், அவர் தன்னை சிக்சருக்கு அடித்தாலும் தனது பந்துவீச்சு வியூகத்தை மாற்றியிருக்க மாட்டேன் என்றும் லீ நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த இளம் வீரர், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்