இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது மைசா திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் நடனக் காட்சியொன்றின் படப்பிடிப்பின் போது, எதிர்பாராதவிதமாக அவரது வலது இடுப்புப் பகுதியில் எலும்பையும் தசையையும் இணைக்கும் முக்கிய தசைநாரில் விலகல் ஏற்பட்டது. தீவிர வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாகப் பல்வேறு படப்பிடிப்புகளில் பரபரப்பாக இயங்கி வந்த ராஷ்மிகா, இந்த திடீர் விபத்தால் முடங்கியுள்ளது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
காலம் முழுவதையும் வீட்டிலேயே கழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த எதிர்பாராத ஓய்வு மனதிற்குப் பெரிய அழுத்தத்தைத் தருகிறது. ஓடி ஓடி உழைத்த அந்த சுறுசுறுப்பான நாட்களை ரொம்பவே இழப்பதாக உணர்கிறேன். விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்க்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை எனத் தெரிவித்துள்ளார்.
காயத்தின் தீவிரத்தை உணர்ந்த ரசிகர்களும், சக திரை பிரபலங்களும் ராஷ்மிகா விரைவில் நலம்பெற வேண்டும் என இணையத்தில் தொடர்ந்து ஆறுதல் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

