கடந்த பல தேர்தல்களிலும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைக் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் திருமாவுகு எம்.பி பதவியும், சில எம்.எல்.ஏக்களும் கிடைத்தார்களே தவிர தமிழக அமைச்சரவையில் விசிகவுக்கு திமுக இடம் கொடுக்கவில்லை..
அதாவது ஆட்சி அதிகாரத்தில் விடுதலைச் சிறுத்தைக்கு திமுக இடம் கொடுக்கவில்லை. இதை பல வருடங்களாகவே வருத்தங்களுடன் சொல்லி வந்தார் திருமா. அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தை ஆதரவு கொடுத்தது. இதனையடுத்து வன்னியரசு எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்..
இந்நிலையில்தான், சமீபத்தில் நாங்கள் தவெக கூட்டணியில் தொடர்கிறோம் என திருமாவளவன் அறிவித்தார். அதுவும் மாநாடு நடத்தி லட்சம் தொண்டர்கள் முன்னிலையில் அவர் நிலைப்பாட்டை அறிவித்தார். ஆனால், இதற்கு தவெக தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம்.
திருமாவளவனின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்று கூட முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்லவில்லை. அதேபோல் இது தொடர்பாக எந்த அமைச்சரும் எந்த பேட்டியிலும் பேசவில்லை. எனவே இப்படிப்பட்ட கூட்டணியில் நாம் எப்படி பயணிக்க போகிறோம் என விசிக நிர்வாகிகள் திருமாவளவனிடம் சொல்லி அதிருப்திகளை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

