விளையாட்டு

உலகக் கோப்பைக்கான டி20 டிக்கெட் விற்பனை தொடக்கம்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடித்த அணிகள், டி20 தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வானது. இவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும். அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

40 லீக் ஆட்டம், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு, கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் நேற்று மாலை 6.15க்கு தொடங்கியது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.150, ரூ.250, ரூ.300, ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும்.

விற்பனை தொடங்கிய உடனே ஏராளமான ரசிகர்கள் இந்த இணைய தளத்தை அணுகியதால் சிறிது நேரம் இணைய தளமே முடங்கியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்