பாலிவுட் நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத், தனது ஆரம்பகால வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான விமர்சனங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தான் 26 வயதாக இருந்தபோது, தனது முன்னாள் காதலர் தன் மீது வழக்கு தொடர்ந்ததுடன், தன்னை ஒரு “சூனியக்காரி” (Wtch) என்று முத்திரை குத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் ஒரு இருண்ட அறையில் அமர்ந்து கொண்டு ரத்தம் குடிப்பதாகவும், பில்லி சூனியம் மற்றும் பில்லி சூனிய வேலைகளில் ஈடுபடுவதாகவும் என் மீது பழி சுமத்தப்பட்டது. ஒரு முன்னணி பத்திரிகையின் ஆசிரியர் கூட இதை பற்றி எழுதினார்” என்று கங்கனா ஆவேசமாக தெரிவித்தார். அந்த சமயத்தில் ஒரு பெண்ணாக தான் மிக மோசமான “விட்ச்-ஹண்டிங்” எனப்படும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.
மேலும், தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், ‘குவீன்’ திரைப்படம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த தனக்கு, ஒரு சாதாரண பெண்ணாக நடித்த அந்த படம் தான் நாட்டின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று தந்ததாக பெருமையுடன் கூறினார்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனது சொந்த உழைப்பால் இன்று இந்த நிலையை எட்டியுள்ளதாக அவர் அந்த பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

