இந்தியா

ரஜினியும் கமலும் அரசியல் பண்ண வந்தப்போ இத சொன்னீங்களா?!.. பிரகாஷ்ராஜுக்கு புளூசட்டமாறன் கேள்வி

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த பல வருடங்களாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் குறித்து அவர் எந்த விமர்சனமும் தெரிவித்தது இல்லை. இந்நிலையில்தான், திடீரென தமிழக அரசியல் பற்றி பேச துவங்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரகாஷ்ராஜ் ‘தற்போது மூன்று மாடல்கள் இருக்கிறது.. ஒன்று திராவிட மாடல், இரண்டாவது அடிமை மாடல், மூன்றாவது சினிமா மாடல்.

திராவிட மாடல் கல்வியை கொடுத்தது.. பல முக்கிய திட்டங்களுக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. அதோடு தமிழ், இனம், மொழி, மானம் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறது ..ஆனால் அடிமை மாடல் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மோடியிடம் கொடுத்து விட்டது.

சினிமா மாடல் (விஜய்) ஒன்றும் இருக்கிறது.. சினிமாவில் மருத்துவராகலாம்.. இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். ஆனால் நிஜத்தில் ஆக முடியுமா?.. என்னுடைய அளவுக்கு கூட விஜய் அரசியல் பேசுவதில்லை.. தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் விஜய் வந்து நின்னாரா?.. நடிகர்களை பார்த்தால் விசில் அடிக்கலாம்.. ஆனால் நாட்டை கொடுக்க முடியாது’ என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், இந்த செய்தியை பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் ‘ரஜினியும் கமலும் தனிக்கட்சி துவங்கி தமிழ்நாட்டை ஆள கிளம்பிய போது இதை சொன்னீர்களா?.. நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்